Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Arankamnews என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Email:Arankamnews@gmail.com SMS 0779073696 - call: 0779073696 Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss
Home » » சவூதியில் மதம் கடந்த மனிதநேயம்! சவூதியில் உதவிய நல்லுள்ளங்கள்!

சவூதியில் மதம் கடந்த மனிதநேயம்! சவூதியில் உதவிய நல்லுள்ளங்கள்!

Written By Unknown on Tuesday, March 1, 2016 | Tuesday, March 01, 2016



ரியாத்: கன்னியாகுமரி மாவட்டத்தின் மேல்மிடாலம் பகுதியை சார்ந்த ஜெய சேகரன் என்ற சேகர் சவுதி அரேபியாவில் பணியாற்றியபடி ஷீலாரஞ்சனி(மனைவி) ஆஷா பிரியதர்ஷினி(மகள்) ஆகியோரோடு குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 8 மாதமாக உடல்நிலை சரியில்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்த அவருக்கு அங்குள்ள சமூக நல அமைப்பான‌ இந்தியன் சோஷியல் ஃபோரம் சமூக நலத்துறை பொறுப்பாளர் ராஜா முஹம்மது மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பல்வேறு உதவிகளை செய்து வந்த நிலையில் கடந்த 17:2:2016 அன்று ஜெய சேகரன் மரணமடைந்தார்.

கணவரை பறி கொடுத்து திக்கற்று நின்ற அவரது மனைவி ஷீலாரஞ்சனி இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகிகளை அணுகி தனது கணவரின் உடலையும் தங்களையும் தாயகம் அனுப்பி வைக்க உதவுமாறு கோரிக்கை வைத்தார். இறந்தவரின் உடலையும் அவரது குடும்பத்தையும் தாயகம் அனுப்பி வைக்க சமூக நல அமைப்பின் நிர்வாகிகள் கடும் முயற்சி மேற்கொண்டனர். தொடர் முயற்சியின் பலனாக 29-2-2016 அன்று இறந்த ஜெய சேகரனின் உடலையும் அவரின் குடும்பத்தினரையும் ரியாத் விமான நிலையத்திலிருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தகவலை கன்னியாகுமரியின் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் நேற்று காலை திருவனந்தபுரம் விமான நிலையம் சென்று SDPI கட்சியின் மாவட்டதலைவர் சுல்ஃபிகர் அலி உடலை பெற்றுகொண்டார். பின்னர் திருவனந்தபுரம் SDPI கட்சியின் ஆம்புலன்சை வரவழைத்து உடலை சம்பந்தபட்ட குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். இவர்களுக்கு உதவியாக‌ மாவட்ட செயலாளர் ஜாஹிர்ஹுசைன் திருவிதாங்கோடு நகர தலைவர் ஜாஃபர் SDTU மாவட்ட தலைவர் மணவை சாதிக் ஆகியோர் செயல்பட்டனர்.
Share this article :

2 comments:


  1. நல்லாட்சி என்று கூறும் மைத்திரி, ரணில் ஆட்சியல் நாட்டின் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

    சட்டவிரோதமான முறையில் யானைக் குட்டியொன்றை பராமரித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உடுவே தம்மாலோக்க தேரரர் இன்று பிணையில் விடுதலைச் செய்யப்பட்டார்.

    தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (வியாழக்கிழமை) அவரை நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.

    தொடர்ந்து உரையாற்றிய அவர், பௌத்த மதத்தின் ஐந்து பிரதான கொள்கைகளும் சீர்குலைக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

    இந்த அரசாங்கம் ஆட்சிபீடமேறும் போது நீதியை நிலைநாட்டுவோம், மக்களுக்கு சாதாரண நீதியைப் பெற்றுக் கொடுப்போம் என்று வாக்குறுதி வழங்கியதாகவும், அவ்வாறு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் மஹிந்த கேட்டுக் கொண்டார்.
    - See more at: http://www.rajaratamedia.com/2016/03/blog-post_39.html#sthash.l6HxCsYy.dpuf

    ReplyDelete

  2. நல்லாட்சி என்று கூறும் மைத்திரி, ரணில் ஆட்சியல் நாட்டின் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

    சட்டவிரோதமான முறையில் யானைக் குட்டியொன்றை பராமரித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உடுவே தம்மாலோக்க தேரரர் இன்று பிணையில் விடுதலைச் செய்யப்பட்டார்.

    தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (வியாழக்கிழமை) அவரை நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.

    தொடர்ந்து உரையாற்றிய அவர், பௌத்த மதத்தின் ஐந்து பிரதான கொள்கைகளும் சீர்குலைக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

    இந்த அரசாங்கம் ஆட்சிபீடமேறும் போது நீதியை நிலைநாட்டுவோம், மக்களுக்கு சாதாரண நீதியைப் பெற்றுக் கொடுப்போம் என்று வாக்குறுதி வழங்கியதாகவும், அவ்வாறு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை


    ReplyDelete

Total Pageviews

மாபெரும் கிரிகெட் சுற்றுத் தொடர்

மாபெரும் கிரிகெட் சுற்றுத் தொடர்

முகநூல் பக்கம்

 
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss
Support : Creating Website | Media | News
Proudly powered by Mohamed solution
Copyright © 2016. Alhuda - All Rights Reserved
Template Design by News Website Published by rajaratamedia